Koothanallur

Koothanallur
Land mark

Tuesday, 9 August 2011

"ஒளிச்சுடர் ஏற்றுவோம்! ஊழல் வழித்தடம் மாற்றுவோம்!"

அன்பார்ந்த தாங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...!)


இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கடந்து விட்டது. நம் சுதந்திர தேசத்தின் வரலாறு காணாத ஊழல்கள் வெளிப் பட்டுக்கொண்டிருக்கும் இதே கால கட்டத்தில் தான் ஊழலுக்கு எதிரான குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன. அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் "லோக் பால் மசோதா" வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத்துணிந்து போராடும் இந்த காலக்கட்டத்தில் வாழும் நாமும், நம் தேச நலனுக்காக ஒரு சிறு துறும்பு அளவு பங்களிப்பையாவது செய்யத் தவறினால் வரலாற்றுப்பதிவுகள் நம்மை வசை மாரி பொழியும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உறங்கிக்கிடக்கும் "அன்னா ஹசாரே" என்ற உணர்வை தட்டி எழுப்ப வேண்டிய தருணம் வந்து விட்டது. 74 வயதை கடந்து விட்ட இந்த சமூக நல ஆர்வலரின் சொல் பாரதப்பிரதமரையே செவி சாய்க்க வைக்கிறதென்றால், "நம்மாலும் முடியும்...!" 

ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை அஸ்திவாரமே உள்ளாட்சி கட்டமைப்புகளில் இருந்து தான் தொடங்குகிறது
. நாம் வாழும் பகுதிக்கே, நமக்குத்தேவையானவற்றை, நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழல் இருக்குமேயானால், ஜனநாயக நாட்டில் சுதந்திரமான முறையில் நாம் வாழ்வதாக கூறுவது நம்மை நாமே கேலி செய்து கொள்வதற்கு ஒப்பாகும்உள்ளாட்சி முறையில், நாம் வாழும் பகுதியை நிர்வகிக்க அதன் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு கூத்தாநல்லூர் பகுதி வாழ் மக்களாகிய நாம் வரி செலுத்துகிறோம். நம் ஊர் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, சுகாதார வாழ்க்கைக்காக, சுற்றுச்சூழல் நலனுக்காக இந்த நகராட்சி நிர்வாகம் நமக்கு என்ன திருப்பி செய்திருக்கிறது? நகராட்சி நிர்வாக அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் சீரழிந்த சாலைகள், குப்பை மேடான தெரு முனைகள், முறையற்ற சாக்கடை அமைப்புகளால் பல பகுதிகளில் கழிவு நீர் தேக்கங்கள், கொசு உற்பத்திப்பண்ணையாக விளங்கும் கூத்தாநல்லூரின் பகுதிகள், எரியாத தெரு விளக்குகளால் இருண்டு கிடக்கும் பல பகுதிகள் என நம் ஊரில் நிலவும் அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்